தமிழகத்தில் இன்று (நவ. 2) 7 மாவட்டங்களில் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, வட பகுதியில் உள்ள மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் இன்று ( நவ. 2) 7 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டங்களில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. இந்த மழை நவம்பர் 4 ஆம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் வட தமிழக மாநிலங்களில் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
அதே போல இன்னும் தொடர் மழை வெளுத்து வாங்கி வருவதால் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ. 2) விடுமுறை விடப்பட்டுள்ளது. அதே போல வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை எதிரொலியாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ. 2) விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து விடாமல் மழை பெய்வதால் பொதுமக்களுக்கு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
மேலும் வடகிழக்கு பருவமழையையொட்டி அரக்கோணம், சென்னை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புப்படையின் 15 அணிகள் மீட்பு நடவடிக்கைகளுக்காக நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அது மட்டுமில்லாமல் மழை தொடர்ந்து பெய்த போதிலும் சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் வழக்கம் போல் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் முதல்வர் ஸ்டாலின் மழை வெள்ளம் தீவிரமாகும்போது அதன் தாக்கத்தை சமாளிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.