
தமிழகத்தில் 9,10 ஆம் வகுப்பில் 5 லட்சம் மாணவர்களுக்கு சத்துணவு – சமூகநலத்துறை அதிகாரி விளக்கம்!!
தமிழகத்தில் பள்ளிகள் கொரோனா காலத்திற்கு பின் சமீபத்தில் திறக்கப்பட்ட நிலையில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும் 5 லட்சம் மாணவர்களுக்கு பள்ளிகளில் சத்துணவு வழங்கப்படுகிறது என சமூகநலத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளில் சத்துணவு:
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இந்நிலையில் பொதுத்தேர்வு காரணமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டன. மேலும் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த மாதம் 8 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டன.
TN Job “FB
Group” Join Now
இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் சத்துணவு வழங்க முடியாத காரணத்தால் மாணவர்களுக்கு பள்ளிகளில் அதற்கான பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதால் அவர்களுக்கு பள்ளிகளிலேயே சத்துணவு வழங்கப்படுகின்றன.
குடும்ப ஓய்வூதிய உச்சவரம்பு ரூ.1.25 லட்சமாக நிர்ணயம் – மத்திய அரசு அறிவிப்பு!!
இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரி கூறுகையில், “தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 9,10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவாக சத்துணவு அந்தந்த பள்ளிகளிலேயே வழங்கப்படுகிறது. 9 ஆம் வகுப்பு மாணவர்கள் 2 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் என 5 லட்சம் பேருக்கு சத்துணவு வழங்கபடுகிறது”, என அவர் கூறினார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்