பிப்ரவரி 21 ஆம் தேதி நடத்தப்படும் NMMS தேர்வுகள் – தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு!!
தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவி திட்டத்தில் கீழ் தகுதித்தேர்வு மூலம், அரசு பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. பிப்ரவரி 21 ஆம் தேதி நடத்தப்படும் இந்த தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் இந்த தேர்வுகளுக்கான முன்னேற்பாடுகள் தொடங்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
NMMS தேர்வுகள்:
நடப்பு கல்வியாண்டில் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நோக்கில் தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவி திட்டத்தின் கீழ் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடத்தப்படும் தேர்வுக்கான அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட நிலையில் விண்ணப்பங்கள் அனுப்ப ஜனவரி 12 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாடங்கள் குறைப்பு – சிபிஎஸ்இ அறிவிப்பு!!
தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் இந்த தேர்வுக்கான முன்னேற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த தேர்வுகள் இந்த ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக மாறும் அமைச்சுப் பணியாளர்கள் – பெயர் பட்டியல் தயார் செய்ய உத்தரவு!!
இதற்காக மாவட்டம் தோறும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு அறிவித்த நடவடிக்கைகளான, கிருமிநாசினி தெளித்தல், மாணவர்களுக்கு இடையேயான இடைவெளி பின்பற்றுதல் போன்ற செயல்பாடுகளை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்