தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – மருத்துவத்துறையுடன் ஆலோசனை!!
தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து மருத்துவத்துறையுடன் ஆலோசனை நடத்தி விரைவில் முதல்வர் முடிவு செய்வார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஜனவரி மாதம் 19 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டன. மேலும் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன.
TN Job “FB Group” Join Now
சட்டமன்ற தேர்தலுக்கு பின் பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மே 3 முதல் மே 21ம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு சட்டமன்ற தேர்தலுக்கு பின் நடத்த ஆலோசனை நடைபெற்று வருகிறது என கூறினார்.
தமிழக அரசு பள்ளிகளில் 2,098 காலிப்பணியிடங்கள் நிரப்புதல் – ஆசிரியர்கள் கோரிக்கை!!
மேலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து மருத்துவத்துறையுடன் கலந்து ஆலோசித்து பின்னர் முதல்வர் முடிவு செய்வார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்