தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது? அரசிடம் கேள்வி!!

0
தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது? அரசிடம் கேள்வி!!
தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது? அரசிடம் கேள்வி!!
தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது? அரசிடம் கேள்வி!!

தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இந்நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.

TN Job “FB  Group” Join Now

இதுகுறித்து தமிழக அரசிடம் கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில் கொரோனா தாக்கம் குறைந்து வந்தாலும், உருமாறிய கொரோனா பரவி வருகிறது. அதனால் பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு யோசித்து வருகிறது. தற்போது பள்ளிகளில் நடத்தப்பட்ட வகுப்புகளில் கொரோனா காரணமாக ஒரு வகுப்பிற்கு 25 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

அதனால் மற்ற மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்தால் இடப்பற்றாக்குறை ஏற்படும். எனவே அரசு யோசித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து கொண்டு வந்தாலும் மற்ற மாநிலங்கள் கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்திஸ்கர், மத்திய பிரதேசம் போன்றவற்றில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது.

தமிழக அரசு பள்ளிகளில் ‘கணினி அறிவியல்’ ஆசிரியர் பணியிடங்கள் – அரசிடம் கோரிக்கை!!

தெலுங்கானா மாநிலம்:

தெலுங்கானா மாநிலத்தில் பள்ளிகள் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் திறக்கப்பட உள்ளன. அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவுறுத்தலின்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.20 லட்சம் காப்பீடு – புதிய திட்டம் அறிவிப்பு!!

பீகார்:

பீகார் மாநிலத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. வகுப்பறையில் சமூக இடைவெளி பின்பற்றி 50 சதவிகித மாணவர்களுடன் பள்ளிகள் இயங்க அனுமதிக்கப்படுகின்றன.

அங்கன்வாடி மையங்களில் வாரம் 3 முட்டை – துணைநிலை ஆளுநர் உத்தரவு!!

உத்தர பிரதேசம்:

உத்தர பிரதேசம் மாநிலத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்தாலும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளன. மேலும் மார்ச் 1 ஆம் தேதி முதல் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!