தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தேதி – தேர்வுகள் இயக்ககம் வெளியீடு!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு 23 ஆம் தேதி வரை நடைபெறும் என தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.
செய்முறை தேர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா காரணமாக 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வந்தன. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 3 ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறைவான இடைவெளியில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளதால் மாணவர்களை தேர்வுக்கு தயாராக்க ஆசிரியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். மாணவர்களுக்கு தேர்வு சுமையை குறைப்பதற்கு அரசு சார்பில் பாடத்திட்டங்களை குறைக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளை நடத்தும் பணியில் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர். இதற்காக பள்ளி ஆய்வகங்களை தூய்மைப்படுத்தும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் நர்சிங் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் – மத்திய அரசு அறிவிப்பு!!
இந்நிலையில் தேர்வுகள் இயக்ககம் சார்பில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான வெற்றுமதிப்பெண் பட்டியலை ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி முதல் 23-ம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!!
செய்முறை தேர்வுகள் நடத்தப்பட்டு அந்த மதிப்பெண்ணை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலில் பதிவு செய்யவேண்டும். தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு இறுதி மதிப்பெண் பட்டியலை மே மாதம் 6 ஆம் தேதி பள்ளி வாரியாக கட்டுகளாகக் கட்டி மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும். இந்த தேர்வுகளுக்கான முன்பணத்தை தலைமை ஆசிரியர்கள் காசோலையாக அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனரிடம் பெற்றுக்கொள்ள வேண்டும்.