தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கட்டணம் – மார்ச் 5 கடைசி நாள்!!
தமிழகத்தில் மே மாதம் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடக்க உள்ள நிலையில் தேர்வு கட்டணத்தை மார்ச் மாதம் 5 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு காரணமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு மட்டும் முதற்கட்டமாக பள்ளிகள் ஜனவரி மாதம் 19 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. அதனை தொடர்ந்து 9, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மே மாதம் 3 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் இன்றி தேர்ச்சி வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
‘ஆல் பாஸ்’ அறிவிப்பு, தனி தேர்வர்களுக்கும் வழங்க வேண்டும் – ஆசிரியர்கள் கோரிக்கை!!
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஏற்பாடுகளை தேர்வுத்துறை தீவிரமாக செய்து வருகின்றது. இதன்படி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான கட்டணம் மார்ச் 5 ஆம் தேதிக்குள் செலுத்தவும், தனித்தேர்வர்கள் மார்ச் 6 ஆம் தேதிக்குள் இந்த கட்டணத்தை செலுத்த வேண்டும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் மாணவர்களுக்கு பள்ளிகள் தற்போது தான் திறந்த நிலையில் குறுகிய காலத்தில் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்