தமிழகத்தில் இன்று(ஏப்ரல் 8) முதல் பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்தல் விடுமுறைக்கு பின்னர் இன்று(ஏப்ரல் 8) முதல் மீண்டும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டான. அதன் பின்னர் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளதால் உயர்கல்வி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் திறக்கப்பட்டன.
TN Job “FB Group” Join Now
பள்ளிகள் திறக்கப்பட்டு 2 மாதங்களில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மே மாதம் 3 ஆம் தேதி தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. அவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் – இன்று முதல் தொடக்கம்!!
இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. இதற்காக பள்ளிகள் வாக்குசாவடிகளாக மாற்றப்பட்டன. அதற்காக ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. தற்போது தேர்தல் முடிவடைந்து பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. கொரோனா இரண்டாம் அலை அதிகமாக பரவி வருவதால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதில் அச்சம் தெரிவிக்கின்றனர்.