தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விபரங்கள் – ஆசிரியர்கள் கோரிக்கை!!
தமிழகத்தில் மே மாதம் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளதால் செய்முறை தேர்வுகள் நடத்துவது குறித்து விவரங்களை விரைவில் அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் தெரிவித்துள்ளது.
பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு:
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 3 முதல் 21 ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் ஏப்ரல் மாதம் முதல் நடத்த திட்டமிட்டுள்ளதால், செய்முறை தேர்வுகளுக்கான விவரங்களை அனுப்ப தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
TN Job “FB Group” Join Now
மேலும் பொதுத்தேர்வு குறித்து அவர் குறிப்பிட்டுள்ளவை, “தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 10 மாதங்களாக பள்ளிகள் திறக்காமல் ஆன்லைன் மூலமாக பாடங்களை நடத்தி வந்துள்ளதால் மாணவர்களுக்கு கற்றல் திறன் குறைவாக உள்ளது. இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ளதால் பாடங்களை நடத்துவதில் சிரமம் ஏற்படுகிறது.
TRB கணினி அறிவியல் ஆசிரியர் தேர்வு குறித்த புகார்கள் – மார்ச் 1 ஆம் தேதி கடைசி நாள்!!
மேலும் பள்ளிகள் வாரத்தில் 6 நாட்கள் நடத்தப்படுவதால் பெண் ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளின் கற்றல் பணியினை மற்றும் குடும்ப தேவைகளை நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்படுகிறது. அரசு பள்ளிகளில் 50 சதவிகிதத்திற்கு அதிகமான பெண் ஆசிரியர்கள் உள்ளதால் அவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
1 முதல் 5ம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறைப்பு – மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
எனவே அவர்களின் நலன் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு நாளும் கூடுதலாக ஒரு மணிநேரம் பணிபுரியும் நேரத்தை மாற்றம் செய்யவும், வாரத்தில் 5 நாட்கள் மட்டும் பள்ளிகள் திறக்க அனுமதிக்க வேண்டும். மேலும் அனைத்து சனிக்கிழமைகளும் வேலை நாட்கள் என்ற உத்தரவை மாற்றி அமைக்க வேண்டும்”, என கல்வித்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்