12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தத்கால் விண்ணப்பம் – தேர்வு துறை அறிவிப்பு!!
தமிழகத்தில் 12 ஆம் பொதுத்தேர்வு மே 3 ஆம் தேதி நடைபெற உள்ளதால் தனித்தேர்வு எழுதும் வாய்ப்பை தவறவிட்டவர்கள் சிறப்பு அனுமதி (தத்கால்) திட்டத்தின்கீழ் இன்று (மார்ச் 8) மற்றும் நாளை (மார்ச்9) விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனித்தேர்வர்களுக்கான அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் 11 மாதங்களாக திறக்கப்பட வில்லை. மேலும் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மே மாதம் 3 ஆம் தேதி முதல் தேர்வுகள் நடத்தப்படும் எனவும் அதற்கான அட்டவணையை அரசு தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் தயாரித்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள் குறைவான கால இடைவெளியில் பொதுத்தேர்வுக்கு தயாராகி வருவதால் மாணவர்களுக்கு படங்களை நடத்தி முடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனி தேர்வர்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் நுழைய இ-பாஸ் அவசியம் – அரசு அறிவிப்பு!!
ஆனால் தனித்தேர்வு எழுதும் மாணவர்களில் விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு சிறப்பு அனுமதி (தத்கால்) திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க தற்போது கால அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு தேர்வர்கள் இன்று(மார்ச் 8) மற்றும் நாளை(மார்ச் 9) தேர்வுத்துறை சேவை மையங்களில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு கட்டணம் செலுத்தும் போது தாமதக்கட்டணமாக ரூ.1000 கூடுதலாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்