தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதிரி தேர்வுகள் – முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை!!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படி மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி மாதிரி தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதிரி தேர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் 10 மாதங்களாக திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தபட்டன. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக ஜனவரி மாதம் 19 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பின்னர் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன.
TN Job “FB Group” Join Now
மாணவர்களுக்கு குறைந்த இடைவெளியில் பாடத்திட்டங்களை முடிக்க முடியாத நிலை இருந்தததால் தமிழக அரசு 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாணவர்கள் அடிப்படை கல்வி அறிவு இல்லாமல் அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியாது என்பதால் மாணவர்களுக்கு வகுப்புகள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.
7வது ஊதியக்குழு – ஏப்ரல் 1 முதல் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ஏற்பட உள்ள மாற்றங்கள்!!
மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படி அனைத்து பாடங்களில் இருந்தும் மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Hi