தமிழக பள்ளி வாகனங்களில் கேமராக்கள் பொருத்த வேண்டும் – முக்கிய அறிவிப்பு!
தமிழக பள்ளி வாகனங்கள் மூலமாக ஏற்படும் விபத்தினை தவிர்ப்பதற்காக பள்ளி வாகனங்களில் கேமராக்கள் கட்டாயமாக பொருத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி வாகனம்:
தமிழகத்தில் பள்ளி வாகனங்கள் விபத்துக்கு உள்ளாவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பள்ளி வாகனங்களில் கட்டாயமாக கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் ஜூன் 12 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில் அனைத்து பள்ளி வாகனங்களும் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, போக்குவரத்துத்துறை, கல்வித்துறை ஆகியோர் கொண்ட குழுக்களால் சோதனை செய்யப்பட்டன.
நகைப்பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. சரிந்தது தங்கம் விலை – இன்றைய நிலவரம்!
இந்நிலையில், பள்ளி வாகனங்களின் உள்ளே, வெளியே மற்றும் முன் பின் பக்கங்களில் கட்டாயமாக கேமராக்கள் பொருத்த வேண்டும் எனவும், கேமராக்கள் பொருத்தப்படாத வாகனங்களில் பள்ளி மாணவர்களை ஏற்ற கூடாது என போக்குவரத்துத்துறை இணை கமிஷனர் அறிவித்துள்ளார். மேலும், தற்போது வரைக்கும் 70 சதவீத வாகனங்களில் கேமராக்கள் பொறுத்தப்பட்டிருப்பதாகவும், மீதமுள்ள பள்ளி வாகனங்களில் பள்ளி திறக்கும் முன்பாகவே கேமராக்கள் பொருத்திருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.