தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மே 1 முதல் விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ள நிலையில் மே 1 ஆம் தேதி முதல் ஆசிரியர்களுக்கு விடுமுறை என பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டை போல இல்லாமல் இரண்டாம் அலை தாக்கத்தின் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஏற்கனவே முதற்கட்ட நடவடிக்கையாக பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை விடுமுறை வழங்கப்பட்டு 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஆனால் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அதனால் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டு வந்தன. அவர்களுக்கு மே மாதம் தேர்வு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் கைமீறி போன காரணத்தினால் தேர்வுகள் ஒத்தி செய்யப்பட்டன, ஆனால் செய்முறை தேர்வுகள் மட்டும் வழக்கம் போல் நடைபெற்றன. இந்நிலையில் அவர்களுக்கு ஏப்ரல் மாதம் 24ம் தேதியில் இருந்து விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டாலும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.
தமிழகத்தில் மே 1, 2 ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு? இன்று முக்கிய அறிவிப்பு!
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை ஆன்லைன் மூலமாக தீர்த்து வைக்க ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் கொரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதால் பலர் பாதிக்கப்பட்டனர். அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் தற்போது கொரோனா தாக்கம் குறையாத காரணத்தினால் ஆசிரியர்கள் மே 1 ஆம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டாம் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு காவல்துறை எஸ்.ஐ தேர்வுகளில் முறைகேடு? நீதிமன்றத்தில் வழக்கு!
மே மாதம் இறுதியில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கான சுற்றறிக்கை பின்னர் வெளியிடப்படும். அதன் பின்னர் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டுமே பொருந்தும் தனியார் பள்ளிகளின் விவரங்கள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.