தமிழக பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – விடுப்பு குறித்த முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் விடுப்பு எடுக்கும் முறை தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மேலும், ஊதியமில்லா அசாதாரண விடுப்பு குறித்தான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளி ஆசிரியர்:
தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டுவரும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தொடக்க பள்ளிகள், நடுநிலை பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆகியவற்றில் வேலை பார்த்து வரும் ஆசிரியர்களும் விடுப்பு எடுக்க நேரிட்டால் உயர் கல்வி அலுவலரிடம் அனுமதி பெற்ற பின்பு தான் விடுப்பு எடுக்க முடியும். அதாவது, தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு கோருதல் மற்றும் பிற தேவைகளுக்கு எழுத்து மூலமாக உயர் அலுவலர்களிடம் அனுமதி பெற வேண்டும்.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஊர்தி – முதல்வர் துவக்கி வைப்பு!
ஆனால், சில சமயங்களில் நேரடியாக விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. இதனால், ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதனை தொடர்ந்து அரசு, அரசு உதவி பெறும், தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் கடந்த மே 25 ஆம் தேதி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தனர். அதாவது, ஆசிரியர்கள் நேரடியாக விண்ணப்பிக்கும் முறைக்கு பதிலாக பள்ளிக் கல்வித்துறை செயலி மூலமாக விடுப்பு எடுக்கும் முறையை அறிமுகம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
Exams Daily Mobile App Download
அதன்படி, TNSED-Schools என்கிற செயலி மூலமாக தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு உள்ளிட்ட விடுப்புகளை ஆசிரியர்கள் எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வரும்போது தங்களது வருகை பதிவை பள்ளிக் கல்வித்துறையின் செயலியில் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊதியமில்லா அசாதாரண விடுப்புக்கு மட்டுமே ஈட்டிய விடுப்பு குறைக்கப்பட வேண்டும் என பள்ளிக் கல்வி ஆணையரகம் தற்போது பதிலளித்துள்ளது.