தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தல்!!
தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று வரும் ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை கல்வித்துறை அதிகாரிகள் வழங்கி உள்ளனர். ஏற்கனவே 12ம் வகுப்பு தவிர பிற மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய அறிவுறுத்தல்:
தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பின்னர் 10 மாதங்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் மீண்டும் நோய்த்தொற்று உயர தொடங்கி உள்ளது. இதனை தொடர்ந்து மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு (12ம் வகுப்பு தவிர்த்து) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
TN Job “FB Group” Join Now
இதற்கான ஓட்டுச்சாவடி அலுவலர் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். தற்போது அதற்காக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் சார்பில், தேர்தல் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, சட்டமன்ற பொதுத்தேர்தல் பணி பார்க்கும் நாட்களை தவிர்த்து பிற நாட்கள் ஆசிரியர்கள் கட்டாயமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும்.
தமிழகத்தில் புனித வெள்ளி (ஏப்ரல் 2) விடுமுறை ரத்து – தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கை!!
தற்போது வீட்டில் இருந்தவாறு பயின்று வரும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி பாடங்களை கற்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் உள்ள பாடங்களை, மாணவர்களுக்கு நடத்தி முடிக்க வேண்டும் எனவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளது.
Really very much valuable