தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – தனியார் கல்வி நிறுவனங்களின் எதிர்பார்ப்பு!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மீண்டும் மூடப்பட்டு உள்ள பள்ளி, கல்லூரிகளை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விரைந்து அடுத்த கல்வியாண்டில் ஆவது முழுவதுமாக திறக்க வேண்டும் என்பதே தனியார் கல்வி நிறுவனங்களின் எதிர்பார்ப்பாக உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
கல்வி நிறுவனங்கள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அச்சம் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் கல்வித்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு ஆன்லைன் வழி பாடங்கள் நடத்தப்பட்டன. உரிய வசதி இல்லாத அரசுப்பள்ளி மாணவர்கள் இதில் கலந்து கொள்ள சிரமம் ஏற்பட்ட நிலையில், கல்வி தொலைக்காட்சி மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டது. தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்ட போதிலும் நிர்வாகங்கள் நிதி சிக்கலில் இருந்தன.
தமிழகத்தில் ஊழியர்களுக்கு Work From Home – சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!!
ஊரடங்கு காலத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் கல்விக்கட்டணத்தை செலுத்த தயக்கம் காட்டியதே இதற்கு முக்கிய காரணம். இதனால் தனியார் பள்ளிகள் ஆசிரியர்களுக்கு ஊதியம் அளிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டது. ஆனால் சில தனியார் பள்ளகள் மாணவர்களை கட்டணம் செலுத்த நிர்பந்திப்பதாக புகார்கள் எழுந்தது. இதனை மீறிய மாணவர்களை ஆன்லைன் வகுப்புகளுக்கான வாட்ஸ்அப் குழுவில் இருந்து நீக்கியதாகவும் பெற்றோர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். ஆனால் இதனை மறுத்த தனியார் பள்ளி நிர்வாகங்கள் பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் பெரும் நிதிச்சுமை ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தன.
TN Job “FB Group” Join Now
எனவே அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை தொடங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு பெற்றோர்கள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பியது. பின்னர் பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டு 9 முதல் 12ம் வகுப்பு வரையிலும், கல்லூரி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸின் 2வது அலை பரவலை தொடர்ந்து மீண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் – ஏப்ரல் 15 முதல் தொடக்கம்!!
அடுத்த கல்வியாண்டு தொடங்க உள்ள நிலையில் மாணவர் சேர்க்கை பணிகளில் கல்வி நிறுவனங்கள் ஈடுபட்டிருந்தன. கடந்த ஆண்டை போல தற்போது ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் சூழல் இருப்பதால் பெற்றோர்களும் முழு கல்விக்கட்டணத்தை செலுத்த யோசிக்கின்றனர். இதனால் தனியார் கல்வி நிறுவனங்களும் பல்வேறு சிக்கலில் உள்ளன. இதனால் கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகளை மீண்டும் முழு அளவில் திறக்க வேண்டும் என அவர்கள் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.