தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு – சுகாதாரத்துறை எச்சரிக்கை!!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை அரசின் உத்தரவினை மீறி மீண்டும் திறந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான அறிவிப்பினை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டுள்ளார்.
பள்ளி, கல்லூரிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் கடந்த ஜனவரி 19ம் தேதி திறக்கப்பட்டன. முதற்கட்டமாக 10, 12ம் வகுப்புகளுக்கும், பின்னர் பிப்ரவரி 8 முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. சுமூகமாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில் கொரோனா வைரஸின் 2வது அலை பரவ ஆரம்பித்தது. பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் தொடர்ச்சியாக பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர்.
அண்ணா பல்கலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – வெளியீடு!!
இதனையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை (அடுத்த அறிவிப்பு வரும் வரை) அளிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் ஆன்லைன் வகுப்புகள் தொடர்நது நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. அரசியல் பொதுக்கூட்டங்களில் தனிமனித இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இன்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், அரசின் உத்தரவினை மீறி பள்ளி, கல்லூரிகளை திறந்தால் பொதுசுகாதார சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து உள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்