தமிழக வருவாய் துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்ப கோரிக்கை – காலவரையற்ற போராட்டம்!!
10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலைநிறுத்த போராட்டம்:
தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் வலியுறுத்தி வரும் கோரிக்கைகளாக குறிப்பிட்டுள்ளவை ,”வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் உள்ள அலுவலக உதவியாளர் முதல் வட்டாச்சியர் வரை, மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் போன்றவை வழங்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
மேலும் நிறுத்திவைக்கப்பட்ட துணை வட்டாட்சியர்களுக்கான தனி ஊதியம் ரூ.1300, தற்போது வழங்கப்படும் முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் வாங்கும் ரூ.9300 உயர்த்தி இணையான தொடக்க ஊதியமாக ரூ.36,900 வழங்க வேண்டும். மேலும் அலுவலக உதவியாளர் மற்றும் பதிவுரு எழுத்தாளர்களுக்கு தனி ஊதியம் வழங்க வேண்டும். வருவாய்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும்.
மே 3 முதல் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு!!
மேலும் கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட பணிநியமனத்தை ஒரே அரசாணையில் பணிவரன்முறை செய்யும் அதிகாரத்தை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற பபோராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தஞ்சாவூர் வட்டாச்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்