தமிழக வருவாய்த் துறையில் காலிப்பணியிடங்கள் – நிரப்பக் கோரி மனு!!
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில், துறை சம்மந்தப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மூலம், தமிழக முதல்வருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
வருவாய் துறை சங்கம் மனு:
தமிழக அரசின் கீழ் செயல்படும் வருவாய்த் துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல கோரிக்கை அடங்கிய மனுவை, தமிழநாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மூலமாக தமிழக முதல்வருக்கு வழங்கியுள்ளனர்.
மாணவர்களுக்கு வருடம் ரூ. 2 லட்சம் உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!
இது குறித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம், திருப்பூர் மாவட்ட தலைவர் கி.தயானந்தன் மற்றும் மாவட்ட செயலாளர் ச.முருகதாஸ் ஆகியோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியாளரின் நேர்முக உதவியாளரிடம் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளவை, “தமிழ்நாடு அரசின் கீழ் வருவாய்துறையில் பணியாற்றி வரும் அலுவலக உதவியாளர் முதல் வட்டாச்சியர் வரை உள்ளவர்களுக்கு ஊதியத்தை அதிகரித்து வழங்க வேண்டும் எனவும், மாவட்ட தலைநகரங்களில் புதியதாக நியமிக்கப்பட்ட அலுவலர்களுக்கு அடிப்படையான பயிற்சி மற்றும் நில அளவை பயிற்சி வழங்க வேண்டும்.
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை – கல்வி ஆணையம் அறிவிப்பு!!
ஏற்கனவே பதவி உயர்வு பெற நடத்தப்பட்ட தேர்வுகளில் தளர்வு அளிக்கப்பட்டது போல், பயிற்சிகளிலும் தளர்வு அறிவிக்கப்பட வேண்டும். மேலும் கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வரன்முறை அளிக்கும் உரிமையை வழங்க வேண்டும். வருவாய்த் துறையில் காலியாக உள்ள இரவு காவலர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர உள்ளிட்ட பணிகளுக்கான காலி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்”. இவ்வாறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மூலம் தமிழக முதல்வருக்கு வழங்கி உள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்