தமிழக ரேஷன் கடைகளில் 13 மளிகைப் பொருட்கள் – இன்று முதல் டோக்கன் விநியோகம்!!
தமிழகத்தில் கொரோனா நிவாரணமாக ரேஷன் கடைகள் மூலம் அரிசி அட்டைதாரர்களுக்கு 13 மளிகைப் பொருட்கள் நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்த நிலையில் அதற்கான டோக்கன் இன்று முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது.
ரேஷன் கடை:
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக பல தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கொரோனா பாதுகாப்பிற்காக தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பல மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இவர்களின் துயரை போக்கும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ரேஷன் கடைகள் மூலம் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.4000 வழங்கப்படும் என்றும் இது இரண்டு தவணையாக வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
தமிழகத்தில் ஜூன் 7க்கு பின்னர் முழு ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் விளக்கம்!
அதன்படி முதல் தவணையாக ரூ.2000 தற்போது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகின்ற ஜூன் மாதம் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் மேலும் பாதிக்கப்படுவர். இதனை கருத்தில் கொண்டு, ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 வகை அடங்கிய மளிகைப் பொருட்கள் நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்.
TN Job “FB Group” Join Now
தற்போது மளிகை பொருட்களை பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் விநியோயகம் செய்யப்படுகிறது. அதன்படி இன்று முதல் வருகின்ற ஜூன் மாதம் 4ம் தேதி வரை இதற்காக டோக்கன் வழங்கப்படும் என்றும் 5ம் தேதி முதல் மளிகை பொருட்கள் டோக்கன்களில் குறிப்பிட்ட தேதிகளில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிர்வாக காரணங்களுக்காக துவரம் பருப்பு மட்டும் வருகின்ற ஜூன் மாதம் 7ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.