தமிழக ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் அளவு குறையும் – அரசு முக்கிய அறிவிப்பு!!
மத்திய அரசு சார்பில் மாநில அரசுகளுக்கு ஒதுக்கப்படும் மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் தமிழக ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் அளவு குறைத்து வழங்கப்படும் என அனைத்து ரேஷன் கடைகளும் விளம்பரம் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு அறிவிப்பு:
தமிழக அரசு சார்பில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் அனைத்து மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் ரூ.2000 நிவாரணம் வழங்கப்பட்டது. மேலும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட பொங்கல் பரிசு பொருள்களுடன் ரூ.2000 ரொக்கமும் வழங்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
மேலும் ஒவ்வொரு மாதமும் இலவச அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், மண்ணெண்ணெய் போன்றவை குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகிறது. கொரோனா காலத்தில் இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் ஒரு சிலிண்டர் உள்ளவர்களுக்கு 3 லிட்டர் மண்ணெண்ணையும், இரண்டு சிலிண்டர் உள்ளவர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படாமல் இருந்தது.
மீண்டும் முழு ஊரடங்கு அச்சம் – சொந்த ஊருக்கு படையெடுக்கும் தொழிலாளர்கள்!!
இந்நிலையில் மத்திய அரசு சார்பில் தமிழக ரேஷன் கடைகளுக்கு பொதுவாக வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவில் 20 சதவிகிதம் மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே பொதுவாக வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை குறைத்து வழங்க வேண்டிய நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை அனைத்து ரேஷன் கடைகளிலும் விளம்பரம் செய்ய வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.