தமிழக ரேஷன் கடை ஊழியர்களின் சம்பள உயர்வு – தலைமை செயலருக்கு கோரிக்கை!!
ஒரே பணிக்கு ஒரே சம்பளம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை ஊழியர்களுக்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு:
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடை ஊழியர்களுக்கு 2015 ஆம் ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை உள்ள சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு வழங்க வேண்டும். ஆனால் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 10 சதவிகிதம் உயர்வு வழங்கப்பட உள்ளதாக குழு பரிந்துரை செய்தது.
TN Job “FB Group” Join Now
தற்போது வெளியான அறிவிப்பில் 5 சதவிகித ஊதிய உயர்வு மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே டி.என்.சி.எஸ்.சி., ரேஷன் பணியாளர்கள், கட்டுனர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை கூட்டுறவு கடை பணியாளர்கள், கட்டுனர்களுக்கும் வழங்க வேண்டும் எனவும் அடிப்படை சம்பளத்தில் 10 சதவிகிதம் அல்லது வீட்டு வாடகை படியாக ரூ.1000 வழங்கப்பட வேண்டும்.
அண்ணா பல்கலை எம்.டெக் பாடப்பிரிவில் 10 சதவீத இடஒதுக்கீடு – ஐகோர்ட் கேள்வி!!
மேலும் அடிப்படை சம்பளத்தில் உச்சவரம்பு இன்றி கணக்கிட்டு அதை வழங்க வேண்டும். மாத சம்பளம் எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதை அறிய மாதிரி சம்பள நிர்ணய பட்டியலை வெளியிட வேண்டும். இதுகுறித்து கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் தலைமை செயலருக்கு கடிதம் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க மாநில பொதுச் செயலர் ஜெயச்சந்திரராஜா தெரிவித்துள்ளார்.