புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு உண்டா?? பயனாளர்கள் குழப்பம்!!

0
புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு உண்டா?? பயனாளர்கள் குழப்பம்!!
புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு உண்டா?? பயனாளர்கள் குழப்பம்!!
புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு உண்டா?? பயனாளர்கள் குழப்பம்!!

தமிழகத்தில் உள்ள 9.55 லட்சம் பேர் அரிசி அட்டைதாரர்களாக மாற்றப்பட்டதை தொடர்ந்து, சென்னையில் புதிய ரேஷன் அட்டைகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில் புதிய அட்டைக்கு மாறியவர்களுக்கு குறுந்செய்தி வந்துள்ளதால் பொங்கல் பரிசு வாங்க ரேஷன் கடையை முற்றுகையிட்டுள்ளனர். ஆனால் புதிய அட்டைதரர்களுக்கான பொங்கல் பரிசு ஒதுக்கப்படாத காரணத்தால் ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் மக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

பொங்கல் பரிசு குழப்பம்:

தமிழக அரசு சார்பில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரேஷன் கடை மூலமாக வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கல் பரிசு ரூ.2500 ரொக்கமும், பொங்கலுக்கு தேவையான பொருள்களும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு 9.55 லட்சம் அட்டைதாரர்கள் அரிசி அட்டைதாரர்களாக உள்ளனர். சில புதிதாக அரிசி அட்டைகளாக மாற்றபட்டவர்களுக்கு சென்னையில் அட்டைகள் தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது.

முதுகலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு – அண்ணா பல்கலை அறிவிப்பு!!

மதுரையில் 8.86 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிதாக 4 ஆயிரம் பேருக்கு அரிசி கார்டு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பொங்கல் பரிசுத்தொகை இன்னும் ஒதுக்கப்படவில்லை. அவர்களுக்கு அட்டைகள் தயாராகிவிட்டதாகவும் கடைகளுக்கு சென்று பொருள்கள் வாங்கும்படி குறுந்செய்தி வந்துள்ளது.

ஆதிதிராவிட மற்றும் பழங்குடி மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம்- புதுச்சேரி அரசு அறிவிப்பு!!

இதனால் அவர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று தங்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும்படி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கான ஒதுக்கீடு இன்னும் வரவில்லை என பணியாளர்கள் கூறினால் பலர் அதை கேட்காமல் சண்டைபோடுகின்றனர். இதனால் ரேசன் கடை பணியாளர்கள் புதிய பிரச்சினையை சந்தித்து வருகின்றனர்.

இது குறித்து மதுரை வழங்கல் அலுவலர் முருகேஸ்வரி கூறுகையில், “சென்னையில் ரேஷன் அட்டைகள் தயாரானதும் குறுந்செய்தி அனுப்பப்படும். ஆனால் பொங்கல் பரிசு வழங்கப்படாது. புதிய அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு உண்டு. விடுபட்டவர்களுக்கான பொங்கல் பரிசு ஒதுக்கீடு செய்து வருகிற ஜனவரி 13-ஆம் தேதி வழங்கப்படும்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!