தமிழகத்தில் இன்று (பிப். 2) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – கனமழை எதிரொலி!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை கடற்பகுதியில் இன்று கரையை கடக்கும் என்பதால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழை காரணமாக நாகை மாவட்டத்தில் இன்று (பிப். 2) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை கடற்பகுதியில் இன்று கரையை கடக்க இருக்கிறது. அதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில் பிப்.5ம் தேதி மது விற்பனைக்குத் தடை – அதிரடி உத்தரவு!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதன் படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை கடல்பகுதிகளில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் எனவும், மன்னர் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அது மட்டுமில்லாமல் நாகை மாவட்டத்தில் இன்று காலை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நாகை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.