
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – இந்த மாவட்ட பொதுமக்களுக்கு மஞ்சள் அலர்ட்!
தமிழகத்தில் வெயில் காலம் தொடங்கி மக்களை பாடாய்படுத்தி வந்தாலும், அங்கங்கே மழை பெய்து மக்களை நிம்மதி அடைய செய்துள்ளது. அந்த வகையில் இன்றைய வானிலை நிலவரம் குறித்து அறிக்கை வெளியாகி இருக்கிறது.
வானிலை அறிக்கை
தமிழகத்தில் பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் வெயில் காலம் தொடங்கிவிடும். வெயில் தாக்கம் அதிகமாக இருந்தாலும் அவ்வப்போது மழை பெய்து மக்களை நிம்மதி அடைய செய்யும். அந்த வகையில் தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கிழடுக்குகளில், கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவி வருகிறது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை – டிகிரி தேர்ச்சி போதும்!
இதன் காரணமாக இன்று (மார்ச் 24) முதல் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழை கோயம்பத்தூர், திருப்பூர், திண்டுக்கல், வேலூர், தேனி, திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் அதிகமாக பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
நாளை (மார்ச் 25) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் மார்ச் 26 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், மார்ச் 27 மற்றும் மார்ச் 28 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Twitter Page for More Latest News Updates
அது மட்டுமில்லாமல் இன்று (மார்ச் 24) முதல் 9 மாவட்டங்களில் இடி, மின்னல் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதால், அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
Exams Daily Mobile App Download