தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை!!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மழைக்கு வாய்ப்பு:
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ளது. வழக்கமாக இந்த நாட்களில் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு கோடைகாலம் ஆரம்பத்திலேயே மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் கோடை வெப்பத்தில் இருந்து மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இன்னும் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
தமிழக உள் மாவட்டங்களில் வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.10,000 அபராதம் – மாநில அரசு அறிவிப்பு!!
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் தற்போது மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் காற்றும் அதிகமாக வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் குறிப்பிட்ட சில இடங்களில் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.