தமிழகத்தின் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!
தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்கள் உட்பட 18 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல்அளித்துள்ளது.
வானிலை மையம்
தமிழகத்தில் கோடை வெயில் முடிந்த சில நாட்கள் ஆன நிலையில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதற்கு முன்னதாக வெப்பச்சலனம் காரணமாகவும், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் எழுந்து வந்த புயல் காரணமாகவும் கடந்த 2 வாரங்களாக தமிழகத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இதை தொடர்ந்து நேற்று (ஜூன் 4) தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் என பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன் படி தென் தமிழக மாவட்டமான கன்னியாகுமரியில் நேற்று அதிகளவு மழை பதிவு செய்யப்பட்டுள்ளது. தவிர மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, திண்டுக்கல் போன்ற உள் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இந்த நிலையில் இன்றும் (ஜூன் 5) தமிழகத்தின் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மறுஅறிவிப்பு வரும் வரை மூடல் – இயக்குனர் சுற்றறிக்கை!!
அந்த வகையில் அடுத்த 2 மணி நேரத்திற்குள்ளாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருவண்ணாமலை, தருமபுரி, சிவகங்கை, புதுக்கோட்டை, கோவை, கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், கடலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.