TN Rain Alert: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை.. வானிலை மையம் வெளியிட்ட தகவல்!
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு:
தமிழகத்தில் பருவமழையின் தீவிரம் இன்னும் குறையாமல் இருக்கிறது. இந்நிலையில் நேற்று (நவம்பர் 23) தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகத்தின் மேல் நகர்ந்து இன்று காலை வலுவிழந்தது. வட தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Follow our Instagram for more Latest Updates
24.11.2022: வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா – ஊரடங்கு அமல்… 31,354 பேர் பாதிப்பு – அச்சத்தில் மக்கள்!
25.11.2022 முதல் 28.11.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையில் மழை பெய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.