தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு ரத்து? அமைச்சர் விளக்கம்!

0
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு ரத்து? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு ரத்து? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு ரத்து? அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவி வரும் காரணத்தினால் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ள நிலையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இதற்கு தகுந்த விளக்கமளித்துள்ளார்.

பொதுத்தேர்வு:

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக தமிழகத்தில் உள்ள எந்த பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்படவில்லை. இதனால் இரண்டு ஆண்டுகளுமே மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் பாடம் கற்பிக்கப்பட்டு வந்தது. பின்பு, கொரோனா பரவல் குறைய ஆரம்பித்துள்ளதால் மீண்டும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவலினால் இரண்டு ஆண்டுகளுமே பள்ளி மாணவர்களுக்கு பொது தேர்வுகள் ஏதும் நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.

ஆதார், பான் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – இதை செய்யாவிடில் இரட்டிப்பு அபராதம்!

கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலமாக தேர்வு நடைபெற்றது. ஆனால், இந்தாண்டு கண்டிப்பாக பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி, பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையும் சமீபத்தில் வெளியானது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மே 6 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 ஆம் தேதியும் பொதுத்தேர்வு ஆரம்பமாக இருக்கிறது. பொதுத் தேர்விற்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் வெகுவிரைவாக நடத்தப்பட்டு வருகிறது.

ExamsDaily Mobile App Download

தற்போது தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவி வரும் காரணத்தினால் தேர்வு கண்டிப்பாக நடைபெறுமா அல்லது தேர்வு தள்ளிவைக்கப்படுமா என மாணவர்களுக்கிடையே பேச்சு வார்த்தைகள் எழுந்துள்ளன. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இதற்கு தகுந்த விளக்கமளித்துள்ளார். அதாவது கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் கூட மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வெழுத ஏற்பாடு செய்துள்ளோம் என கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!