தமிழகத்தில் பொதுத் தேர்வெழுதாத மாணவர்களுக்கான மறுதேர்வு எப்போது? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!
தமிழகத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மொழிப்பாட தேர்வினை எழுதாத காரணத்தினால் மறுதேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மறுதேர்வு எப்போது என்பது தொடர்பான அறிவிப்பையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
மறுதேர்வு:
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13 ஆம் தேதி துவங்கப்பட்டது. தேர்வு துவங்கப்பட்ட முதல் நாளிலேயே 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. இது தொடர்பாக கடந்த மார்ச் 16 ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு நாளும் தேர்வு முடிந்தவுடன் தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களின் விவரங்களை சேகரித்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும், தேர்வெழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு வைக்க வேண்டும் என்பது தொடர்பான பேச்சுவார்த்தையும் எழுந்துள்ளது. இது தொடர்பாக வரும் மார்ச் 24 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு மாணவர்கள் குறித்தான பள்ளி மேலாண்மை குழு கூட்டமும், ஏப்ரல் 10 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு மாணவர்கள் குறித்தான பள்ளி மேலாண்மை குழு கூட்டமும் நடத்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் மாதம் தேர்வெழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மார்ச் 21 ஆம் தேதி கல்லூரி விடுமுறை – முக்கிய அறிவிப்பு!
மேலும், இந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களை சிறப்பு பயிற்சியில் கலந்து கொள்ள செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுத்தேர்வு குறித்து பெற்றோர்களுக்கு விழுப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், 14417 உதவி மையம் குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.