தமிழக பொது மக்கள் கவனத்திற்கு – GST குறித்து அரசின் வேற லெவல் அறிவிப்பு!
ஒரே இந்தியா, ஒரே வரி என்னும் நோக்கத்தில் ஜி.எஸ்.டி வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பொருட்களை வாங்கும்போது சரக்கு மற்றும் சேவை வரிக்கான பில் ரசீதுகளை பொதுமக்கள் கேட்டு வாங்குமாறு தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. இது குறித்து முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
முக்கிய அறிவிப்பு:
வரிகள் நேர்முக வரி, மறைமுக வரி என இரு வகைப்படும். சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி. என்பது ஒரு மறைமுக வரியாகும். இந்தியா முழுவதும் ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கங்களால் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. மேலும் ஜி.எஸ்.டி.யின் கீழ் நான்கு வகையான வரிகள் வசூலிக்கப்படுகின்றன. அவை ஒன்றிய ஜிஎஸ்டி (CGST) , மாநில ஜிஎஸ்டி (SGST) , ஒருங்கினைந்த ஜிஎஸ்டி (IGST), யூனியன் பிரதேச சரக்கு மற்றும் சேவை வரி (UTGST) ஆகும். ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி (CGST) என்பது வருவாய் ஒன்றிய அரசால் வசூலிக்கப்படும். இதை தொடர்ந்து மாநில அரசின் ஜிஎஸ்டி (SGST), மாநிலங்களுக்கு நடைபெறும் விற்பனையின் மூலம் வரும் வருவாய் மாநில அரசுகளால் வசூலிக்கப்படும்.
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு கவனத்திற்கு – WhatsApp மூலமான பணப்பரிவர்த்தனை!
மேலும் மாநிலங்களுக்கு இடையேயான ஜிஎஸ்டி (IGST), மாநிலங்களுக்கு இடையில் நடைபெறும் விற்பனையின் மூலம் வரும் வருவாய் ஒன்றியஅரசால் வசூலிக்கப்படும். யூனியன் பிரதேச சரக்கு மற்றும் சேவை வரி (UTGST), நாட்டின் எந்த யூனியன் பிரதேசத்திற்கும் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் பொருட்களை வாங்கும்போது சரக்கு மற்றும் சேவை வரிக்கான பில் ரசீதுகளை பொதுமக்கள் கேட்டு வாங்குமாறு தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது கடைகளில் பொருட்கள் வாங்கும் போது அதற்கான பில்லையும் பொதுமக்கள் கேட்டு பெற்றால் மட்டுமே அரசுக்கு ஜிஎஸ்டி வரி வருவாய் முழுமையாக அரசுக்கு கிடைக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பொதுமக்கள் ரசீதை கேட்டு பெறுவதை ஊக்குவிக்கும் விதமாக ‘எனது பில் எனது உரிமை’ என்ற திட்டத்திற்காக ஒன்றரை கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தாங்கள் பெறும் ஜிஎஸ்டி வரியுடன் கூடிய பில்லின் நகல்களை வணிகவரி துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள் என்றும், அவ்வாறு பதிவேற்றம் செய்யும் வாடிக்கையாளர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.