தமிழக தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை இயக்குனர் உத்தரவு!

2
தமிழக தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு -  கல்வித்துறை இயக்குனர் உத்தரவு!
தமிழக தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு -  கல்வித்துறை இயக்குனர் உத்தரவு!
தமிழக தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு –  கல்வித்துறை இயக்குனர் உத்தரவு!

தமிழகத்தில் அரசு பள்ளிகளை போல தனியார் பள்ளி ஆசிரியர்களும் வீட்டில் இருந்து பணியாற்றலாம் என பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளி ஆசிரியர்கள்:

கொரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்குகள் அமலில் உள்ளன. தமிழக சுகாதாரத்துறை நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த வருட கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ம் தேதி நடைபெற இருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று வேகமெடுத்து வரும் காரணத்தினால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் ஆசிரியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு மாணவர்கள் வீட்டிலிருந்தே தேர்விற்கு தயாராக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  இதற்காக ஆசிரியர்கள் அவர்களுக்கு வழிகாட்டும்படி பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலமாக ஆசிரியர்களின் வாட்ஸ் ஆப் குரூப்பிற்கு முக்கிய வினாக்கள், அலகு தேர்வுகளுக்கு உரிய பாடங்கள் அனுப்பப்படும்.

சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கான அங்கீகாரம் – கால அவகாசம் நீட்டிப்பு !!

அதை ஆசிரியர்கள் இணைய வகுப்புகள் மூலமாக தினமும் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்படி அரசு பள்ளி ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியலாம் என்றும் மாணவர்களுக்கு தினசரி தேர்வுகள் வைத்து மதிப்பெண்களை வழங்கி தேர்விற்கு தயார்ப்படுத்த வேண்டும் எனவும்  பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளது.

பள்ளி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

இதனை தொடர்ந்து தனியார் பள்ளி ஆசிரியர்களும் வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் நிர்வாகங்களுக்கு அரசு அறிவுத்தியுள்ளது. நடப்பு கல்வி ஆண்டு முடிவடையும் நிலையில், புதிய கல்வி ஆண்டிற்காண பணிகளுக்கு தேவைப்பட்டால் ஆசிரியர்களை வரவழைத்துக் கொள்ளலாம். மேலும் மற்ற நாட்களில் விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் பள்ளிக்கு வருகை புரிய கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. நாங்க என்றைக்கோ பள்ளிக்கு போகாமல் வீட்டில் தான் இருக்கிறோம் சம்பளம் இல்லாமல்.
    அரசாங்கம் எங்களை (தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களை) சமூகப் பணியில் உள்ளவர்களாக நினைக்க வில்லை.
    எங்களை யாரும் கண்டு கொள்ளவில்லை.

  2. தனியார் பள்ளி ஆசிரியர்களை எல்லாம் உங்களுக்கு நினைவில் இருக்கிறதா முடி திருத்தும் பணியில் உள்ளவர்களுக்கு, அழகு நிலையம் வைத்திருப்பவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் அரசு தனியார் பள்ளி ஆசிரியர்களை எங்கே ஒரு எதிர்கால சமூகத்தை உருவாக்குபவர்கள் ஆக கருத்தில் கொண்டுள்ளது. பல பல பேருடைய வாழ்க்கை இன்று தலைகீழாக மாறியுள்ளது. முதல் அலையில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் இரண்டாம் அலையில் மீண்டு திரும்புவார்களா? அரசின் கருணை கரம் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பக்கமும் திரும்புமா? என்று ஒரு வருட ஏக்கத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!