தமிழக தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நிதியுதவி – அரசுக்கு கோரிக்கை!!
தெலுங்கானா தனியார் பள்ளி ஆசிரியர்களை போல எங்களுக்கும் உதவித்தொகை ரூ.2000 வழங்க வேண்டும் என தமிழக தனியார் பள்ளி ஆசியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசிரியர்கள் கோரிக்கை:
தமிழகத்தில் கொரோனா பரவலினால் மாநில அரசுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். முதல் கட்டமாக மாணவர்களின் நலன் கருதி கடந்த வருடம் மார்ச் 15 தேதி முதல் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. தொடர்ந்து தொற்று அதிகரித்ததால் பள்ளிகள் திறக்கப்படவே இல்லை.
தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவி வருவதால் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்காததால் தனியார் பள்ளி ஆசிரியர்கள் கற்பித்தல் பணியின்றி சிரமத்தில் இருக்கின்றனர். சில பள்ளிகளில் இணையதள வகுப்புகள் நடைபெறுகிறது. அவர்களுக்கும் முழு சம்பளம் வழங்கப்படவில்லை, சில பள்ளிகளில் சம்பளமே வழங்கவில்லை என ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையை கருத்திற்கொண்டு தெலுங்கானா மாநிலத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.2000 மற்றும் 25 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா தடுப்பூசிக்கு ஜிஎஸ்டி தள்ளுபடி – மத்திய அரசு திட்டம்!
இதேபோல் தமிழக தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து இந்த வருடமும் பள்ளிகள் திறக்கப்படவில்லை எப்போது திறக்கும்? என்ற நிலை நிலவுகிறது. இதனை கருத்திற்கொண்டு தமிழக அரசு தெலுங்கானா தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்குவது போல தமிழக தனியார் பள்ளி ஆசிரியர்களும் மாதம் உதவித்தொகை ரூ.2000 மற்றும் 25 கிலோ அரிசி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்