தமிழக தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் – இணையத்தில் வெளியீடு!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல ஆயிரக்கணக்கில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கான படுக்கை வசதிகள் போதுமான அளவில் இல்லை. அதனால் தமிழக அரசு படுக்கை வசதிகள் உள்ள தனியார் மருத்துவமனைகள் விவரங்களை அறிய இணையதளம் ஒன்றை உருவாகியுள்ளது.
படுக்கை வசதிகளின் அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு தடுப்பு நடவடிக்கைகள் பல எடுத்துள்ளது. மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 28 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்விற்கான சாத்தியக்கூறுகள் – அதிகாரிகள் ஆலோசனை!!
பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள போதிலும் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல் ஆம்புலன்ஸ்களில் சிகிச்சை பெறும் அவலம் ஏற்படுகிறது. மேலும் இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அரசு தரப்பில் படுக்கை வசதிகளை அதிகரிக்க போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் வார் ரூம் அமைக்கப்பட்டு 24 மணிநேரம் செயல்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
அதற்கான சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு படுக்கை வசதிகள் குறித்தும், ஆக்சிஜன் தேவைகள் குறித்தும் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் குறித்து தெரிந்து கொள்ள அரசு இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. https://stopcorona.tn.gov.in/beds.php என்ற இணையதளம் மூலமாக படுக்கை வசதிகள் உள்ள தனியார் மருத்துவமனைகள் குறித்து துல்லியமாக தெரிந்து கொள்ளலாம்.