தமிழகத்தில் தனியார் பேருந்துகள் இயக்கம் எப்போது? உரிமையாளர்கள் விளக்கம்!
தமிழகத்தில் 100% பேருந்துகள் இயக்கத்துக்கு அரசு அனுமதி கொடுக்கும் பட்சத்தில் தனியார் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும் என ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் தெரிவித்துள்ளார்.
பேருந்துகள் இயக்கம்
கொரோனா 2 ஆம் அலை தடுப்பு நடவடிக்கைகளாக தமிழகத்தில் மே மாதம் முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும் ஜூலை 12 ஆம் தேதியுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடையவுள்ள நிலையில் அதற்கு மேல் சில தளர்வுகள் கொடுக்கப்படும் என எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனிடையே தமிழகம் முழுவதும் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் படி, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்தும் 50% இருக்கை வசதிகளுடன் இயங்கி வருகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் 500க்கும் அதிகமான அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
விஜய் டிவி புதிய சீரியல் ‘தமிழும் சரஸ்வதியும்’ – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
ஆனால் பல மாவட்டங்களில் தனியார் பேருந்துகள் இயக்கம் இன்னும் துவங்கவில்லை. இதனிடையே தமிழகத்தில் 100% இருக்கை வசதிகளுடன் பேருந்து இயக்கத்துக்கு அனுமதி கொடுத்தால் மட்டுமே தனியார் பேருந்துகளின் இயக்கம் துவங்கும் என ஈரோடு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளாக முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் கடந்த 2 மாதங்களாக பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தது.
இன்று முதல் வார இறுதி ஊரடங்கு ரத்து, தியேட்டர்கள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
ஆனால் தற்போது 50% பேருந்துகள் இயக்கத்திற்கு அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில், அரசு பேருந்துகள் மட்டும் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் 50% பயணிகளுடன் தனியார் பேருந்துகளை இயக்குவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அதனால் தனியார் பேருந்துகளின் இயக்கம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இருப்பினும் ஒரு சில மாவட்டங்களில் தற்போது தனியார் பேருந்துகள் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் 100% பேருந்து சேவைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டால் மாத்திரமே தனியார் பேருந்துகள் இயக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.