தமிழ்நாடு காவல்துறை எஸ்.ஐ தேர்வுகளில் முறைகேடு? நீதிமன்றத்தில் வழக்கு!
தமிழகத்தில் காவல் துறையில் எஸ்.ஐ காலிப்பணியிடங்களுக்கான 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அந்த தேர்வை எழுதிய தேர்வர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
எஸ்.ஐ தேர்வுகளில் முறைகேடுகள்:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) மூலமாக 2019 ஆம் ஆண்டு எஸ்.ஐ பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பின் படி எழுத்துத்தேர்வு, உடல்தகுதி, மற்றும் நேர்காணல் என மூன்று கட்ட தேர்வு முடிவில் 969 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் அந்த தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக இந்த தேர்வை எழுதியவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இது குறித்து இந்த தேர்வை எழுதியவர்கள் கூறுகையில், “2019 ஆம் ஆண்டு வெளியான எஸ்.ஐ தேர்வுக்கான அறிவிப்பின் படி 969 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் வேலூர் மாவட்டத்தில் மட்டும் தொடர்ச்சியான பதிவெண்கள் உள்ள 144 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள மதுரவாயல் தனியார் கல்லூரியில் தேர்வு எழுதியவர்கள். அவர்கள் மாநில அளவில் முதல், இரண்டாம், ஆறு, ஒன்பதாம் இடங்களை பிடித்து உள்ளனர்.
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் 4970 பணியிடங்கள் – 3 ஆண்டிற்கு தொடர் நீட்டிப்பு!!
இவர்களுக்கு ஏற்கனவே தேர்வு மைய கண்காணிப்பாளர் செல்போன் எண் போன்ற விவரங்கள் வழங்கப்பட்டு தேர்வுகளில் அவர்கள் உதவியுடன் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. தேர்வு நடைபெறும் போது மொபைல் பார்த்து தேர்வு எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு 400 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன் மூலம் நீதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முறைகேடாக தேர்வு செய்யப்பட்டவர்கள் நீக்கம் செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு பணி வழங்கப்பட வேண்டும்”, இவ்வாறு தெரிவித்தனர்.