இனி காவல்துறையிடம் இருந்து குற்றவாளிகள் தப்பிக்க முடியாது – புதிய செயலி அறிமுகம் !
தமிழகம் முழுவதும் உள்ள குற்றவாளிகளின் விவரங்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு தற்போது புதிய செயலி ஒன்று தமிழ்நாடு காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய செயலி:
தமிழக காவல்துறை மாநிலத்தில் நடைபெறும் குற்றங்களை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு காவல்துறையின் அவசர உதவி எண்கள் மற்றும் பல்வேறு விழிப்புணர்வுகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக காவல்துறை ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தி உள்ளது .
Follow our Instagram for more Latest Updates
அதாவது தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகளின் சரித்திர பதிவேடு விவரங்கள் அடங்கிய ‘ டிராக் கேடி’ என்னும் புதிய செயலியை தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு இன்று அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த செயலி மூலம் குற்றவாளிகளின் குற்றப்பத்திரிகை விவரங்கள், ரவுடிகளின் எண்ணிக்கை, நிலுவையில் உள்ள வழக்குகள் போன்றவற்றை உடனடியாக அறிய முடியும் என தெரிவித்துள்ளார் .
தமிழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் புதிய அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இதனால் காவல்துறை அதிகாரிகள் குற்றவாளிகளின் விவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பார்கள். இதனால் குற்ற வழக்குகளில் காவலர்கள் விரைந்து செயல்பட இந்த செயலி உதவும் எனவும் டி.ஜி.பி சைலேந்திரபாபு கூறியுள்ளார். மேலும் இந்த ‘டிராக் கேடி’ செயலியின் மூலம் தமிழகத்தின் 39 மாவட்டங்களில் உள்ள 30 ஆயிரம் ரவுடிகளின் சரித்திர பதிவேடு விவரங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.