தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு – அதிகாரபூர்வ அறிவிப்பு!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்முறை தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு ஒத்திவைப்பு:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன. முதற்கட்ட நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் கொரோனா தாக்கம் குறைந்து வந்த காரணத்தினால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
TN Job “FB Group” Join Now
உயர்கல்வி வகுப்புகளான 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முதற்கட்டமாக நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. ஆனால் பள்ளிகள் திறந்து 2 மாதங்களில் கொரோனா தாக்கம் மாணவர்களுக்கு பரவியது. இதனால் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
TN Police Constable PMT/PET தேர்வுகள் ஒத்திவைப்பு – டிஜிபி அறிவிப்பு!!
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மே மாதம் 5 ஆம் தேதி முதல் தேர்வு தொடங்கப்பட்டு மே மாதம் 31 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது, இந்த பேரிடர் காலத்தில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது சிரமம் என்பதால் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி – ஜூலை 1 முதல் வழங்க முடிவு!!
ஏற்கனவே சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரத்து செய்யப்படும் எனவும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் ஏற்கனவே தொடங்கப்பட்ட செய்முறை தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பல்கலைக்கழக மற்றும் கல்லூரி தேர்வுகள் ஆன்லைனில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.