‘பிங்க்’ WhatsApp செயலி – காவல் துணை ஆணையர் எச்சரிக்கை!!
தமிழகம் முழுவதும் பிங்க் வாட்ஸ் ஆப் என்று பரவி வரும் லிங்குகளை பதிவிறக்கம் செய்வது மூலமாக செல்போன்களை ஹேக் செய்யலாம் என காவல் துணை ஆணையர் எச்சரித்துள்ளார்.
பிங்க் வாட்ஸ் ஆப்:
தமிழகம் முழுவதும் வாட்ஸ் ஆப் செயலி மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலி அதிக பிரபலமாக இருப்பதற்கு காரணம் அது அனைத்து மக்களும் எளிதில் பயன்படுத்தும் செயலியாக உள்ளது. மேலும் தகவல் பரிமாற்றத்திற்கு எளிய முறையில் உள்ளது. இந்நிலையில் பிங்க் வாட்ஸ் ஆப் என்ற லிங்க் அனைத்து மக்களின் தொலைபேசி எண்ணுக்கும் பரவி வருகிறது.
TN Job “FB Group” Join Now
பிங்க் வாட்ஸ் ஆப் என்று கூறி வரும் லிங்குகளை தொட வேண்டாம் என்று தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர் சைபர் கிரைம் நிபுணர்கள். கூகிள் பிலே ஸ்டோர் மூலமாக பதிவிறக்கம் செய்யும் செயலிகளை மட்டுமே மக்கள் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இந்த லிங்களை நமது செல்போனில் பதிவிறக்கம் செய்வதால் நமது போனில் உள்ள தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளதாக காவல் துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை – அரசுக்கு கோரிக்கை!!
தற்போது Pink வாட்ஸ் ஆப் என்ற லிங்க் பரவி வருகிறது. அது வாட்ஸ் ஆப் செயலியின் புதிய அப்டேட் என சொல்லி பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த லிங்கை ஓபன் செய்து இன்ஸ்டால் செய்த சிலரது மொபைல் போன் வைரஸால் தாக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.