தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்க அனுமதி? அரசின் முடிவு என்ன!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று தினசரி பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வரும் நிலையில், ஜூன் 21ம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று அதிகாரப்பூரவ அறிவிப்பு வெளியாக உள்ளது. இதில் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி அளிக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இது பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 21 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனை மேலும் சில கூடுதல் தளர்வுகளுடன் தொடர்வது குறித்த அதிகாரப்பூரவ அறிவிப்பு இன்று வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதில் பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி, நகைக்கடைகள், துணிக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
முழு ஊரடங்கு ரத்து, ஜூலை 1 முதல் பள்ளி & கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இந்நிலையில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த கல்வியாண்டு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்த நிலையில், 2021 தொடக்கத்தில் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. உயர்கல்வி மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்றது. பின்னர் கொரோனா 2வது அலை அதிகரித்ததை கருத்தில் கொண்டு மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டு, தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஜூன் 21 முதல் பேருந்துகள் இயங்க அனுமதி? முன்னேற்பாடுகள் தீவிரம்!
இந்த ஊரடங்கில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டன. தனியார் பள்ளிகள் ஆன்லைனில் பாடங்களை கற்பித்து வருகின்றன. ஒரு வருடத்திற்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் தனியார் பள்ளிகள் நிதிச்சுமையில் சிக்கி உள்ளன. இதனால் ஆசிரியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படுவதில்லை. எனவே அரசு அவர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. மேலும் பெற்றோர்களின் கவனமும் அரசுப்பள்ளிகள் பக்கம் திரும்பி உள்ளது.
ஜூலை 5 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இதனால் கடந்த ஜூன் 14ம் தேதி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கிய நிலையில், அரசுப்பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க பெரும்பாலான பெற்றோர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீடு, கல்விக்கட்டணம் உள்ளிட்டவை இதற்கான முக்கியமான காரணமாக உள்ளது. ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி வழி கற்பித்தல் மாணவர்களுக்கு போதுமான அளவில் இல்லாததால் தற்போது ஜூன் 21க்கு பின்னரான ஊரடங்கில் மீண்டும் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கல்வி நிறுவனங்கள் திறப்பதற்கான தடைகள் தொடர வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.