தமிழகத்தில் நர்சிங் படிப்புகளுக்கான மாணவியர் சேர்க்கை அறிவிப்பு – பிப்ரவரி 21 கடைசி நாள்!!
2020-21 ஆம் கல்வியாண்டில் நர்சிங் படிப்புகளுக்கான மாணவியர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியான நிலையில் பிப்ரவரி 21 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நர்சிங் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை:
தமிழகத்தை சேர்ந்த இந்திய குடியுரிமையுள்ள மாணவியர்களிடம் இருந்து 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் இடங்களை நிரப்புவதற்கான மாணவியர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வெளியிடப்பட்டுள்ளன.
TN Job “FB Group” Join Now
இந்த படிப்புகளில் சேர விருப்பமுள்ளவர்கள் http://www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் உள்ளே சென்று அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பங்களை வருகிற பிப்ரவரி 15 முதல் பிப்ரவரி 21 ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கான விண்ணப்ப கட்டணத் தொகையாக ரூ.300 வசூலிக்கப்படும்.
இந்த கட்டணத் தொகையை டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலமாக செலுத்தலாம் அல்லது எதாவது ஒரு வங்கியில் “The Secretary, Selection Committee, Kilpak, Chennai-10” என்ற பெயரில் DD எடுக்கலாம். மேலும் SC, ST பிரிவினர் மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கு விண்ணப்பக் கட்டணத்தில் விலக்கம் அளிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்