தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் – தலைமை செயலர் எச்சரிக்கை!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகரித்து வருவதால் இரவு ஊரடங்கிற்கு வாய்ப்புள்ளதாக தலைமை செயலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இரவு ஊரடங்கு அமல்:
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா தாக்கம் மக்களை அச்சுறுத்தி வருகிறது. அதனை தடுக்க மாநில அரசு பல நடவடிக்கைகள் எடுத்து படிப்படியாக கொரோனா தாக்கம் குறைந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 4000க்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
அதனால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. மேலும் பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் மாநில அரசுகள் கொரோனா நிலவரத்தை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளை அமல்படுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 16 ஆம் தேதி வரை தடுப்பூசி திருவிழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது
தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை – CEO சுற்றறிக்கை!!
இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பயனளிக்கவில்லை என்றால் மீண்டும் இரவு ஊரடங்கு விதிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என தமிழக அரசு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஐயா ஒரு மாசம் எம் எல் ஏ சம்பளம் எங்களுக்கு போட்டு உட்டுட்டு நாலு மாசம் தமிழ் நாட்ட பூட்டிடுங்க சாமி புண்ணியமா போவட்டும்