தமிழகத்தில் புது மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்புடன் கடமையாற்ற வேண்டும் – முதல்வர் அறிவுரை!

0
தமிழகத்தில் புது மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்புடன் கடமையாற்ற வேண்டும் - முதல்வர் அறிவுரை!
தமிழகத்தில் புது மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்புடன் கடமையாற்ற வேண்டும் - முதல்வர் அறிவுரை!
தமிழகத்தில் புது மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்புடன் கடமையாற்ற வேண்டும் – முதல்வர் அறிவுரை!

தமிழகத்தில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்புடன் கடமையாற்ற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார்.

முதல்வர் அறிவுரை:

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் தேதி, 11 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் புதிதாக நியமனம் செய்யப்பட்டனர். அவ்வாறு புதிதாக நியமனம் செய்யப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ( பிப். 4) கலந்துரையாடல் நடத்தினார். அப்போது பேசிய முதல்வர் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்புடன் கடமையாற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

திருச்செந்தூரில் நாளை (பிப்.05) தைப்பூச திருவிழா – இந்த ஆடைகளை அணிய பக்தர்களுக்கு தடை!!

மேலும் மாவட்டங்களில் எந்தெந்த பணிகள் நடைபெறாமல் இருக்கிறது, எந்தெந்த பணிகள் எந்த நிலையில் இருக்கிறது, என தெரிந்து கொண்டு அதன் படி செயல்பட வேண்டும். மேலும் உங்களது மாவட்டத்திற்கான அறிவிப்புகளை கண்காணித்து ஆட்சியர்கள் நிறைவேற்றி தர வேண்டும். அது மட்டுமில்லாமல் நிலுவையில் உள்ள திட்டங்களை விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மாநிலத்தின் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என குறிப்பிட்ட அவர், உங்களை தலைமை செயலர் அவ்வப்போது சோதனை செய்வார் எனவும், அவ்வப்போது நானும் ஆய்வு செய்வேன் என தெரிவித்தார். அரசியலை தாண்டி மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் எனவும், மாவட்ட ஆட்சியர்கள் சட்டம் ஒழுங்கை பேணி காக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!