தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி – ஆளுநரிடம் உரிமை கோருகிறார் முக ஸ்டாலின்!!

0
தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி - ஆளுநரிடம் உரிமை கோருகிறார் முக ஸ்டாலின்!!
தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி - ஆளுநரிடம் உரிமை கோருகிறார் முக ஸ்டாலின்!!
தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி – ஆளுநரிடம் உரிமை கோருகிறார் முக ஸ்டாலின்!!

தமிழகத்தில் மே 7 ம் தேதி புதிய முதல்வராக பதவியேற்க இருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். அதற்காக அதிகாரபூர்வமாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை நாளை மலை 6.30 மணிக்கு சந்தித்து உரிமை கோர உள்ளார்.

ஸ்டாலின் பதவியேற்பு :

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் 7ம் தேதி கொரோனா பரவலுக்கு மத்தியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தேர்தல் சிறப்பாக நடந்து முடிந்தது. பிறகு மே 2ம் தேதி பல சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. நள்ளிரவு வரை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.  நடந்து முடிந்த தேர்தலில் திமுக அதிக தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

“FB  Group” Join Now

கடந்த 10 வருடங்களுக்கு பிறகு திமுக தமிழகத்தில் ஆட்சியமைக்க உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார். சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பலரும் தங்கள் வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகின்றனர். புதிய முதல்வராக பதவியேற்கயுள்ள அவர் நாளை மாலை 6.30 மணிக்கு தமிழக ஆளுநர் அவர்களை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார்.

தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்? உரிமையாளர்கள் பாதிப்பு!

இதன் பிறகு மே 7ம் தேதி காலை 10 மணிக்கு முதல்வராக பதவியேற்க உள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கருத்திற்கொண்டு பதவியேற்பு விழாவானது தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி நடைபெறும். மேலும் பதவி ஏற்பு விழாவுக்கு ஒரு அமைச்சருக்கு 8 முதல் 10 பாஸ் மட்டுமே வழங்கப்பட்டு, மொத்தம் 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவித்துள்ளன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!