தமிழகத்தின் புதிய எம்எல்ஏக்கள் நாளை பதவி ஏற்பு – தற்காலிக சபாநாயகர் அறிவிப்பு!!
தமிழக அமைச்சரவை கூட்டத்தின் புதிய சபாநாயகராக பதவி ஏற்றுள்ள கு.பிச்சாண்டி தலைமையில் நாளை அனைத்து எம்.எல்.ஏ-க்களும் பதவி ஏற்க உள்ளதாக தலைமை செயலகத்தில் இருந்து அவர் பேட்டியளித்துள்ளார்.
பதவியேற்பு விழா:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடத்தப்பட்டது. அதன் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக 158 தொகுதிகளில் பெரும்பான்மையான வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிது. முதன்முறையாக திமுக தலைவர் முக ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.
சென்னை கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் – ஊரடங்கில் நடத்த திட்டம்?
இந்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டத்தின் புதிய சபாநாயகராக கு.பிச்சாண்டி அவர்களை இன்று காலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தனர். அந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் அவர் தற்போது தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.
TN Job “FB Group” Join Now
அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட அனைத்து எம்.எல்.ஏ.,களும் நாளை பதவி ஏற்பார்கள்”, என தெரிவித்தார். புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படும் வரை தற்காலிக சபாநாயகராக செயல்படுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.