தமிழக வாகன ஓட்டிகள் கவனத்திற்கு – போக்குவரத்தில் மாற்றம்! பிரதமர் வருகை எதிரொலி!
தமிழகத்தில் நாளை (ஜூலை 28) 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற இருக்கும் நிலையில், பிரதமர் மோடி வருகையை ஒட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
செஸ் போட்டிகள்:
சென்னையில் 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் துவக்க விழா நாளை (ஜூலை 28) நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சர்வதேச போட்டியில் 188 வெளிநாடுகளில் இருந்து 3000க்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் பங்கேற்க இருக்கின்றனர். இந்நிலையில் உலக சதுரங்க போட்டியின் துவக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் நாளை 28.07.2022 மாலை நடைபெறுகிறது.
Post Office ல் மூத்த குடிமக்களுக்கான சூப்பர் திட்டங்கள் – முழு விவரம் இதோ!
அந்த நிகழ்ச்சியில் பிரதமர், தமிழ் நாடு ஆளுநர், முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், பல்வேறு நாடுகளைச் சார்ந்தச் சதுரங்க விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர். அதனால் சென்னைப் பெருநகரப் போக்குவரத்துக் காவல் துறை சார்பில் பல விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் படி நாளை (ஜூலை 28) நண்பகல் முதல் இரவு 9.00 மணிவரையில் ராஜா முத்தைய்யா சாலை, ஈவெரா பெரியார் சாலை, மத்தியச் சதுக்கம், அண்ணாசாலை (ஸ்பென்சர் சந்திப்பு வரை) மற்றும் சுற்றியுள்ளப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் டிமலஸ் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் ராஜா முத்தையச் சாலை வழியாக செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. அதே போல ஈவெகி சம்பத் சாலை ஜெர்மயா சாலைச் சந்திப்பிலிருந்து இராஜா முத்தையாச் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. மேலும் வணிக நோக்கம் இல்லாத வாகனங்கள் ஈவெரா சாலை கெங்குரெட்டிச் சாலைச் சந்திப்பு, நாயர் பாலச் சந்திப்பு, காந்தி இர்வின் சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கிச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் பிராட்வேயிலிருந்து வருகின்ற வணிக நோக்கிலான வாகனங்கள் குறளகம், தங்கசாலை, வால்டாக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் நோக்கித் திருப்பிவிடப்படும். அவ்வாறு திருப்பி விடப்பட்ட வாகனங்கள் வியாசர்பாடி மேம்பாலம் வழியாகச் சென்றுத் தங்கள் வழித்தடங்களை அடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சென்னை வாகன ஓட்டிகள் மேற்கண்ட சாலைகளில் செல்லாமல் தவிர்த்து மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய ரயில் நிலையத்திற்கு வர வேண்டிய பயணிகள் முன்னதாகவே திட்டமிட்டு நேரத்திற்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.