உலக அளவில் தொழில்நுட்ப துறையில் தமிழகம் 10% பங்களிப்பு – முதல்வர் பெருமிதம்!

0
உலக அளவில் தொழில்நுட்ப துறையில் தமிழகம் 10% பங்களிப்பு - முதல்வர் பெருமிதம்!
உலக அளவில் தொழில்நுட்ப துறையில் தமிழகம் 10% பங்களிப்பு - முதல்வர் பெருமிதம்!
உலக அளவில் தொழில்நுட்ப துறையில் தமிழகம் 10% பங்களிப்பு – முதல்வர் பெருமிதம்!

சென்னை வர்த்தக மையத்தில் தொழில் முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டுக்கான உச்சி மாநாடு நடைபெற்றது. இதனை தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதில் தொழில்நுட்பத்தில் தமிழகத்தின் பங்கு குறித்து முதல்வர் தெரிவித்துள்ளதை பற்றி விரிவாக பார்ப்போம்.

தொழில்நுட்பம்:

தமிழகத்தில் சென்னை வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்பவியல் சார்பாக தொழில் முனைவோர், தகவல் தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான உச்சி மாநாட்டை முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதில் இவர் தெரிவித்துள்ளதாவது, தொழில்நுட்ப துறையில் உலக நாடுகளில் ஏற்படும் வளர்ச்சியை தமிழகத்திலும் உருவாக்க, சென்னை, ஓசூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் “டெக் சிட்டி” என்ற தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்களை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு 2023 -24ம் நிதியாண்டிற்கான சட்டமன்ற பேரவை – நிகழ்ச்சி நிரல் வெளியீடு!

இந்த தொழில்நுட்ப நகரமானது நிதி நிறுவனங்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவற்றை ஒன்றாக இணைக்க கூடிய மையமாக செயல்படும் என்று கூறியுள்ளார். அத்துடன் அனைத்து வகையான தொழில்துறைகளின் பங்களிப்போடு வருகிற 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதே நோக்கம் என்று கூறியுள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

இது மட்டுமல்லாமல் இந்திய தொழில்நுட்ப மற்றும் உலகளாவிய திறன் மையங்களில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் 1300க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்கிக் கொண்டு வருவதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!