தமிழகத்தில் விரைவில் தமிழ் வழி மருத்துவ கல்லூரி – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் பள்ளி மற்றும் உயர்கல்வி துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த வேளையில் தமிழ் வழியில் மருத்துவம் பயிலும் வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்கும் நோக்கில் புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மருத்துவ கல்லூரி:
தமிழக மருத்துவ கல்லூரிகளில் 2022 – 2023-ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழ் வழியில் மாணவர்கள் மருத்துவம் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பள்ளி கல்வி முதல் உயர்கல்வி வரை பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் தங்களது தாய் மொழியில் கல்வி கற்க வேண்டும் என்று மருத்துவ படிப்பின் பாடப்புத்தகங்கள் மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது. அண்மையில் மத்திய பிரதேசத்தில் மருத்துவ பாடப்புத்தகங்கள் ஹிந்தியில் மொழி பெயர்க்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் சென்னையில் தமிழ் வழியில் மருத்துவ கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடை உரிமையாளர்களுக்கு அரசின் அறிவுறுத்தல் – மீறினால் ரூ.500 அபராதம்!
Follow our Instagram for more Latest Updates
மேலும் மத்திய அரசிடம் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி கோரியுள்ளோம். இந்த அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் தமிழ் வழியில் பள்ளி படிப்பை முடித்த மருத்துவம் பயிலும் மாணவர்கள் பயன் பெறுவார்கள். அதனை தொடர்ந்து தற்போது மருத்துவ படிப்பிற்கான பாடப்புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.