தமிழகத்தில் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட் மூடல் – அரசு உத்தரவு!!
தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமெடுத்து வரும் நிலையில் சனிக்கிழமைகளில் இறைச்சி கடைகள் மற்றும் மீன் மார்க்கெட்களை மூட அரசு உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே அமலில் உள்ள ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு காரணமாக கடைகளை மூட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைகள் மூடல்:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே ஏப்ரல் 20 முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இன்று முதல் மால்கள், பெரிய கடைகள், சலூன்கள் மற்றும் பார்களை மூட அரசு உத்தரவிட்டு உள்ளது. சில மாநிலங்களில் ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மே 31 வரை உள்நாட்டு விமானங்களில் 80% பயணிகள் மட்டுமே அனுமதி – மத்திய அரசு உத்தரவு!!
தமிழகத்தில் முழு ஊரடங்கு குறித்து தற்போது வரை முடிவெடுக்கப்படவில்லை. வருகிற மே 1, 2ம் தேதிகளில் முழு ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தலாம் என உயர்நீதிமன்றம் பரிசீலனை செய்துள்ளது. தமிழகத்தில் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்பதால், சனிக்கிழமைகளில் இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் நோய் பரவல் அபாயம் உள்ளது.
TN Job “FB Group” Join Now
எனவே இனி வரும் சனிக்கிழமைகளிலும் இறைச்சி கடைகள் மற்றும் மீன் மார்க்கெட்களை மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனை மீறி கடைகளை திறந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.