தமிழகத்தில் மே மாதம் ஊரடங்கு நீட்டிப்பு – புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு வருகிற ஏப்ரல் 30ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மே மாதம் நீட்டிக்கப்பட உள்ள ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஊரடங்கு நீட்டிப்பு:
தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் தினசரி இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதுமட்டுமின்றி அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனால் சனிக்கிழமைகளில் இறைச்சி கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க அன்றைய தினமும் மீன் மார்க்கெட், இறைச்சி கடைகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 26ம் தேதி முதல் பார்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், சலூன் கடைகள் உள்ளிட்டவை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற மே 2ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் மே 1, 2ம் தேதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தலாம் என உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
தமிழகத்தில் முழு ஊரடங்கு அச்சம் – ரயில் நிலையங்களில் குவியும் புலம்பெயர் தொழிலாளர்கள்!!
இதற்கிடையில் ஏற்கனவே உள்ள ஊரடங்கு விதிமுறைகள் வருகிற ஏப்ரல் 30ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதனால் மே மாதம் நீட்டிக்கப்பட உள்ள ஊரடங்கில் புதிய தளர்வுகள் வழங்கப்படுமா? அல்லது கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்து ஆட்சி அமைக்கும் கட்சியின் விபரங்கள் வெளியாகி விடும் என்பதால், அதன் பின்னரே ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு ஊரடங்கு குறித்து முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது.
Corona erukaaaa? Please tell me
Iruku aana ila…..